1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 11 டிசம்பர் 2020 (16:38 IST)

ரசிகர்களின் அன்புத் தொல்லை – எஸ்கேப் ஆன சிம்பு!

பாண்டிச்சேரியில் மாநாடு படப்பிடிப்பை முடித்து சென்னைக்கு கிளம்பிய சிம்பு ரசிகர்களின் அன்பு தொல்லைக்கு ஆளாகியுள்ளார்.

நடிகர் சிம்பு கொரோனா பாதிப்புக்குப் பின் அவர சுசீந்தரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துவிட்டு இப்போது மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். தற்போது பாண்டிச்சேரியில் அதன் படப்பிடிப்பு நடந்து பெரும்பகுதி முடிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் படப்பிடிப்பை முடித்து தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து சிம்பு சென்னைக்கு கிளம்ப இருந்த போது ஹோடல் வாசல் அருகே அவர் காரை மறித்து ரசிகர்கள் செல்பி எடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளனர்.

கூட்டம் ஏராளமாக இருந்ததால் அது இயலாத காரியம் என்பதால் சிம்பு தனது காரை அங்கேயே விட்டுவிட்டு பின்னர் வேறு ஒரு கார் மூலமாக அங்கிருந்து கிளம்பியுள்ளாராம். இதனால் ஆசையாக செல்பி எடுக்க வேண்டும் என வந்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.