1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2017 (12:10 IST)

வருத்தத்தில் ஸ்ரேயா

சிம்பு ஜோடியாக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்துவரும் ஸ்ரேயா, வருத்தத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், இந்த வருத்தம் சிம்புவால் ஏற்பட்டதல்ல.

 
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்ரேயாவிடம், அழகு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த  ஸ்ரேயா, “நம் நாட்டு மக்களிடம், அழகு பற்றிய கண்ணோட்டமும், புரிதலும் தவறாக உள்ளது. அழகில்லை என்பதால் ஒரு பெண்ணுக்குத் திருமணம் தள்ளிப் போகிறது. குறிப்பிட்ட பிராண்ட் க்ரீமைப் பயன்படுத்தியது, அவள் அழகாகி, திருமணம்  நடப்பதாகக் காட்டப்படும் விளம்பரங்களால் மக்கள் முட்டாள்தனமாக யோசிக்கின்றனர். 
 
நானும் இதுபோன்ற விளம்பரங்களில் நடித்துள்ளேன். அதை இப்போது நினைத்தால் எனக்கு வெட்கமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. குறிப்பாக, பேர் அண்ட் லவ்லி மற்றும் கோகோ கோலா விளம்பரங்களில் நடித்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் ஸ்ரேயா.