1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (08:07 IST)

செந்தில் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் செந்தில் கதையின் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான்களில் கவுண்டமணி செந்திலுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. கவுண்டமணியோடு இணைந்த நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள செந்தில் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். இப்போது ஒரு சில படங்களிலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த கதையில் சிறையில் இருந்து பல ஆண்டுகளுக்குப் பின் விடுதலை ஆகும் கதாபாத்திரத்தில் செந்தில் நடிக்க உள்ளாராம். 

இந்த அறிவிப்பு வெளியான சில வாரங்களில் நேற்று படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ஒரு கிடாயின் கருணை மனு போல இந்த படமும் கிராமத்தை மையமாகக் கொண்டு உருவாகிறதாம். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.