1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 24 ஜூலை 2017 (22:30 IST)

சாரி சூர்யா, செல்வராகவன் மன்னிப்பு கேட்டது ஏன்?

பிரபல இயக்குனர் செல்வராகவன் 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டு, அடுத்ததாக சந்தானம் நடித்து வரும் 'மன்னவன் வந்தானடி' என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார்



 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு ஆர்மேனியா என்ற நாட்டில் நடந்து வருகிறது. முன்னாள் சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்த இந்த நாட்டில் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் கொட்டி கிடக்கின்றாதாம். ஆனால் இந்த நாட்டில் செல்போன் டவர் சரியாக கிடைக்காததால், செல்வராகவனால் சூர்யாவுக்கு நேற்று பிறந்த நாள் வாழ்த்து கூற முடியவில்லை என்றும் அதனால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறிவிட்டு, இன்று அவர் தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்
 
மன்னவன் வந்தானடி' படத்திற்கு பின்னர் சூர்யா படத்தை செல்வராகவன் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தில் ராகுல் ப்ரித்திசிங் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.