வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 27 மே 2014 (14:10 IST)

ஆகஸ்டில் வெளிவரும் சண்டமாருதம்

சரத்குமார் நான்கு வருடங்களுக்குப் பின் ஹீரோவாக நடிக்கும் படம் சண்டமாருதம். இந்தப் படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். படத்தை இயக்குவது ஏ.வெங்கடேஷ்.
த்ரில்லர் கதைகளுக்கு தற்போது மவுசு இருப்பதால் அந்த ஜானரில் சண்டமாருதம் கதை எழுதப்பட்டுள்ளது. முதல்முறையாக சண்டமாருதத்தின் முழுக்கதையையும் சரத்குமாரே எழுதியுள்ளார். பிறகு அந்தக் கதையை எழுத்தாளர் ராஜேஷ்குமாரிடம் தந்து திரைக்கதை அமைத்து வசனம் எழுதி வாங்கியிருக்கிறார்கள்.
 
நேற்று கட்சி கூட்டத்தில் பேசிய சரத்குமார் தனது சண்டமாருதம் பற்றியும் குறிப்பிட்டார். ஏற்கனவே படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட இப்படம் ஆகஸ்டில் திரைக்கு வரும், மிகப்பெரிய வெற்றியை பெறும் என கூறினார்.