வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2014 (14:09 IST)

சரத்குமார் தலைமையில் ஆயிரத்தில் ஒருவன் வெள்ளிவிழா

சரத்குமார் தலைமையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தின் வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது.

1965 இல் திரைக்கு வந்த ஆயிரத்தில் ஒருவனுக்கு இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. கடந்த மார்ச் மாதம் டிஜிட்டலில் மேம்படுத்தப்பட்ட ஆயிரத்தில் ஒருவனை திவ்யா ஃபிலிம்ஸ் தமிழகமெங்கும் வெளியிட்டது.

122 திரையரங்குகளில் வெளியான இப்படம் சென்னை ஆல்பர்ட் மற்றும் சத்யம் திரையரங்குகளில் 175 ஆவது நாளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனை முன்னிட்டு படத்தின் வெற்றி விழாவையும், படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு பாராட்டுவிழாவையும் நாளை சென்னை காமராஜர் அரங்கத்தில் கொண்டாடுகின்றனர்.

இந்த விழாவுக்கு சரத்குமார் தலைமை தாங்குகிறார். படத்தை வெளியிட்ட திவ்யா ஃபிலிம்ஸ் சொக்கலிங்கம் அனைவரையும் வரவேற்று பேசுகிறார்.

சத்யராஜ், பி.வாசு, பாண்டியராஜன், விக்ரமன், விவேக், செந்தில், கே.ராஜன், மயல்சாமி, சார்லி, ஜாக்குவார் தங்கம் உள்பட ஏராளமான எம்.ஜி.ஆர். விசுவாசிகள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.