1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 20 மே 2020 (16:27 IST)

முதல்முறை மகளை கையில் ஏந்திய போது சஞ்சீவ் செய்த சத்தியம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.

கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்மபுரியில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் என்ற பெயரில் பிரமாண்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் முன்னிலையில் பேசிய நடிகர் சஞ்சீவ் ஆல்யா மானஸா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ஆல்விற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பார்த்துக்கொள்வதில் பிஸியாக இருந்தாலும் சோஷியல் மீடியாவில் கணவன் , மனைவி இருவரும் எப்போதும் போலவே ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கியூட் மகள் ஐலாவை முதன் முறையாக மருத்துவமனையில் கையில் தூக்கியபோது எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு " ''என் மகள், என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். அவளுக்கான உலகத்தை நான் அமைத்து கொடுப்பேன்'' என ஒரு பொறுப்பான தந்தை ஸ்தானத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சூப்பர் கியூட் போட்டோ அனைவரையும் ஈர்த்து வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My baby girl is one of my greatest treasures in life And I would give her the world if I can

A post shared by sanjeev (@sanjeev_karthick) on