ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 17 மே 2022 (14:55 IST)

அப்டேட் கேட்ட ரசிகர்கள்… சலார் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

சலார் படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

பாகுபலி படங்களுக்கு பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி1,2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து அவர் புகழும் பெருகிறது. மார்க்கெட்டும் எகிறியது.  ஆனால் அதன் பின்னர் அவர் நடித்த சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய இரு படங்களும் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அவர் நடித்துவரும் ‘சலார்’ படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை 30 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது. இந்நிலையில்  “படத்தைப் பற்றி விரைவில் அப்டேட் வரவில்லை என்றால் நான் தற்கொலை செய்துகொள்வேன்” என பிரபாஸ் ரசிகர் ஒருவர் எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இன்று படத்தைத் தயாரிக்கும் ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் சலார் படத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல் படம் சம்மந்தமான தகவல்கள் இந்த பக்கத்தில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.