வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By bala
Last Modified: சனி, 24 டிசம்பர் 2016 (12:11 IST)

வெள்ளித்திரை கைவிட்டதால் மீண்டும் சின்னத்திரைக்கு சென்ற ரம்யா

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பிரபலமானர் ரம்யா. இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு.


 


இவருக்கும் அப்ரஜித் என்பவருக்கும் கடந்த 2014 பிப்ரவரியில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் தனது பணியை தொடர்ந்து செய்து வந்தார் ரம்யா. இதனிடையே சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புகளையும் தேடிவந்தார். சில படங்களிலும் நடித்தார். இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக பிரியா தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். பின்னர் முழு வீச்சில் பட வாய்ப்புகளை தேடிவந்தார். இதற்காக தொலைக்காட்சி தொகுப்பாளினி பணியையும் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது மீண்டும் தொலைக்காட்சியில் தோன்ற ஆரம்பித்துள்ளார். அந்த தனியார் தொலைக்காட்சி நடத்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார்.