வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2016 (11:19 IST)

ஆஸ்தான கதாசிரியருக்கு ட்விட்டரில் ரஜினிகாந்த் இரங்கல்

மறைந்த பிரபல தயாரிப்பாளரும், கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் அவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

 
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான புவனா ஒரு கேள்விக்குறி, பிரியா, முரட்டுக்காளை, கழுகு, போக்கிரி ராஜா, தர்மத்தின் தலைவன், மனிதன், தம்பிக்கு எந்த ஊரு, அடுத்த வாரிசு, ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, பாயும் புலி உள்ளிட்ட எண்ணற்ற படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார்.
 
ரஜினிகாந்த் நடித்த பிரியா, ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல், குரு சிஷ்யன், வீரா உள்ளிட்ட படங்களை தயாரித்தும் உள்ளார். இந்நிலையில் நேற்று, உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
 
இந்நிலையில், பஞ்சு அருணாச்சலம் மறைவுக்கு, ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.