லாக்கப்பில் இருந்த ரஜினி முருகனுக்கு அக்.21 ரிலீஸ்
திருப்பதி பிரதர்ஸின் கடன் பிரச்சனையால் வெளிவராமல் இருந்த ரஜினி முருகனை வரும் 21 -ஆம் தேதி வெளியிட முயற்சிகள் நடக்கிறது. ஆமாம், முயற்சிதான்.
உத்தம வில்லனை தயாரித்தவகையில் திருப்பதி பிரதர்ஸுக்கு தூக்க முடியாத கடன் சுமை. அதில் கணிசமான பகுதியை அவர்கள் வடநாட்டிலிருந்து தொழில் செய்யும் நிறுவனத்துக்கு தர வேண்டியிருந்தது.
வட்டியோடு கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று முள்வேலி போட்டிருந்தவர்கள் இப்போது இறங்கி வந்து அவர்களாகவே ஒரு வாசலை திறந்திருக்கிறார்கள்.
படம் வெளியானதும், கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று இதுவரை காட்டி வந்த கறாரில் கொஞ்சம் கருணை காட்டியிருக்கிறார்கள்.
இதன் காரணமாக, வரும் 21 -ஆம் தேதி படத்தை வெளியிட தீவிர முனைப்பில் உள்ளது திருப்பதி பிரதர்ஸ்.
வாங்க பிரதர்ஸ்... வந்து வெற்றிக்கொடி நாட்டுங்க.