வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (14:43 IST)

எல்லாரும் போய் சாவுங்க: எரிச்சலடையும் ரைசா!

எல்லாரும் போய் சாவுங்க: எரிச்சலடையும் ரைசா!

ஷக்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து மக்களின் விருப்பப்படி வெளியேறியதை அடுத்து ஷக்தி இழந்த காயத்ரியாக பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார் காயத்ரி. இதனால் இப்பொழுது தான் காயத்ரியின் முழு சுயரூபம் தெரிய வரும் என கூறப்படுகிறது.


 
 
பிக் பாஸ் வீட்டில் யாரை வெளியேற்றுவது என்ற நாமினேஷன் இந்த வாரம் வெளிப்படையாகவே நடைபெற்றது. இதில் ரைசாவை பழி வாங்க காயத்ரி களமிறங்கினார். ஆனால் களம் காயத்ரிக்கு எதிராக அமைந்தது. ஒட்டு மொத்த பிக் பாஸ் குடும்பமும் காயத்ரிக்கு எதிராக நாமினேட் செய்தார்கள்.
 
இந்நிலையில் இன்று இரண்டாவது புரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி அதில் ரைசாவும் சினேகனும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சக்தி போன கோபத்தை என் மேல் காட்டுவார்கள் என ரைசா கூற அது ரைசா மேல் உள்ள கோபம் அல்ல என் மீதான் கோபம் என்கிறார் சினேகன்.
 
முன்னாடி ஓவியாவுக்கு வக்காளத்து வாங்கின, இப்போ ரைசாவுக்கு வக்காளத்து வாங்குறேன் என தன் மீது கோபம் இருக்கலாம் என சினேகன் கூறுகிறார். இதனையடுத்து நான் பேசுறதே இல்லை நீங்க என் அக்கா, தங்கச்சி கிடையாது எனக்கு உங்க விஷியத்துல்ல சுத்தமா விருப்பம் இல்லை என காயத்ரியை பற்றி ரைசா கூறுகிறார்.
 
இதனையடுத்து சினேகன் என் மீது தப்பா இருந்தா நேர வந்து சொல்லுங்க எனக்காக இன்னொருத்தர பழிவாங்க வேண்டாம் என காயத்ரி பற்றி ரைசா கூறுகிறார். தொடர்ந்து காயத்ரி பற்றிய புராணத்தால் எரிச்சலடையும் ரைசா எல்லாரும் போய் சாவுங்க என்கிறார் கடுப்பாக.