வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 28 நவம்பர் 2016 (16:10 IST)

சவாலுக்கு ரெடியா கார்த்தி?? ராதிகா சரத்குமார் காட்டம்!!

நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ள நிலையில் கார்த்திக்கு நடிகை ராதிகா, பல்வேறு கேள்விகளை எழுப்பி சவால் விடுத்துள்ளார்.


 
 
நடிகர் சங்க தலைவராக இருந்தபோது சரத்குமார் ஊழல் செய்ததாக விஷால் குற்றம் சாட்டினார். ஊழலுக்கான ஆதாரங்களை வெளியிடுவுதாகவும் கூறி வருகிறார்.
 
இந்நிலையில், நடிகை ராதிகா, பொருளாளர் கார்த்தியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், வாழ்நாள் முழுவதும் அறங்காவலர்களாக இருக்க விரும்பினர் என்று கூறுகிறீர்களே கார்த்தி, உங்களிடம் அதற்கான சான்று உள்ளதா? 
 
நடிகர் சங்கம் சிவாஜி கணேசனால் நிறுவப்பட்டது. அறங்காவலரின் குடும்பத்தினர் மட்டுமே அதில் தொடர வேண்டும் என்ற விதியை நடிகர் எஸ்.எஸ்.ஆர் திரும்பப் பெற்றார். உங்களுக்கு வரலாறு தெரியவில்லை என்றால் உங்கள் அப்பாவைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று காட்டமாக கூறியுள்ளார்.
 
மேலும், தனிப்பட்ட விரோதத்தினால் நியாயத்தை மறைக்காதீர்கள். நடிகர் சங்க ஆடிட்டரிடமிருந்து ஆட்சேபணை இல்லை என கடிதம் வாங்கினீர்களா? எதையாவது நிரூபித்தீர்களா? எல்லாம் ஆதாரம் இல்லா குற்றச்சாட்டுகள். நீங்கள் என்ன நீதிபதியா? நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினரான எனக்கு ஆதாரத்தைக் காட்டுங்கள். 
 
நடிகர் விஷாலிடம் முதிர்ச்சி இல்லை. நீங்களும் உங்கள் முட்டாள்தனத்தைக் காட்டாதீர்கள். எந்த கணக்கும் ஒப்படைக்கப்படவில்லை என்றீர்கள், தேர்தல் முடிந்ததும் சரத்குமார், நாசரிடம் அனைத்து கணக்கு வழக்குகளையும் தாஜ் ஹோட்டலில் சந்தித்து கொடுத்தது என்ன காதல் கடிதங்களா?
 
இது என் அறிக்கை, இதனை நிரூபிக்குமாறு கார்த்திக்கு நான் சவால் விடுக்கிறேன் என ராதிகா தெரிவித்துள்ளார்.