1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2017 (17:33 IST)

தமிழ் ராக்கர்ஸை பிடிச்சிட்டா எல்லாம் முடிஞ்சிருமா? ஆர்.ஜே.பாலாஜி பொளீர் கேள்வி!!

சமீபத்தில் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஆர்.ஜே.பாலாஜி திருட்டு விசிடி பற்றியும், தமிழ் ராக்கர்ஸ் பற்றியும் பேசினார்.


 
 
பாலாஜி பேசியதாவது, ஆன்லைன் திருட்டு என்பது தமிழ் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய மற்றும் ஆங்கில திரையுலகிற்கும் அச்சுறுத்தலாகத் தான் இருக்கிறது.
 
ஆன்லைன் திருட்டு பிரச்சினைக்கு வள்ளுவர் கோட்டத்தில் உட்கார்ந்து பேசினால் முடிவு கிடைக்காது. இன்போசிஸ் மாதிரியான நிறுவனங்களில் பணியாற்றும் பொறியாளர்களோடு உட்கார்ந்து பேச வேண்டும்.
 
தமிழ் ராக்கர்ஸை பிடித்துவிட்டால் அனைத்தும் அழிந்துவிடுமா? அதற்கு பதில் இன்னொரு 10 தமிழ் ராக்கர்ஸ் வருவார்கள். தொழில்நுட்பத்தை நம்மால் அழிக்க முடியாது. தொலைக்காட்சி, இணையம் மூலமாக எப்படி பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும் என கூறினார்.