வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: புதன், 18 ஜனவரி 2017 (17:41 IST)

லைட் ஆப் பண்ணாமலே செக்ஸ் வைத்துக் கொண்டேன் - பிரியங்கா சோப்ரா ஓபன் டாக்

போன் செக்ஸ் மற்றும் அறையிலிருந்த விளக்கை அணைக்காமலேயே உடலுறவு வைத்துக் கொண்டேன் என பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பகீரங்க பேட்டி அளித்துள்ளார்.


 

 
தமிழில் நடிகர் விஜயுடன் ‘தமிழன்’ படத்தில் நடித்தவர் பிரியங்கா சோப்ரா. அதன் பின் அவர் ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்தார். அதன் பின் அவருக்கு ஹாலிவுட் வாய்ப்புகளும் வந்தது. இவர் நடித்துள்ள ‘பேவாட்ச்’ என்ற ஆங்கில படம் விரைவில் வெளிவரவுள்ளது.
 
இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் நடத்தும் காபி வித் கரண் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.


 

 
அவரிடம் கரண், நீங்கள் போன் செக்ஸ் வைத்துக் கொண்டதுண்டா? எனக் கேட்டார். அதற்கு ‘ஆமாம்’ என பிரியங்கா பதிலளித்தார். மேலும், இந்த நிகழ்ச்சியை தனது தாய் பார்க்கக் கூடாது என சிரித்தபடியே கூறினார். 
 
அதன்பின் தன்னுடைய காதலருடன் சேர்ந்து ஒன்றாக குளித்ததாகவும், அறையிலிருந்த விளக்கை (லைட்) அணைக்காமலேயே செக்ஸ் வைத்துக் கொண்டதாகவும் அவர் வெளிப்படையாக தெரிவித்தார். இந்த விவகாரம் பாலிவுட்டில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.