1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: வியாழன், 4 மே 2017 (15:49 IST)

“தனுஷிடம் பாடம் கற்றேன்” – பிரசன்னா

தனுஷ் படத்தில் நடித்ததன் மூலம், அவரிடமிருந்து பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார் பிரசன்னா.


 
 
தனுஷ் முதன்முதலாக இயக்கிய படம் ‘பவர் பாண்டி’. இந்தப் படத்தில் ராஜ்கிரண் மகன் ராகவனாக நடித்திருந்தார் பிரசன்னா. மூன்று வருட இடைவேளைக்குப் பிறகு முதலில் வெளியான இந்தப் படம், அவருடைய இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாகத் துவக்கி வைத்துள்ளது. இன்றைய இளைஞர்களின் மனநிலையை அப்படியே வெளிப்படுத்தி இருந்தார் பிரசன்னா.
 
“இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பு தனுஷிடம் அவ்வளவு நெருங்கிய பழக்கமில்லை. அவரைக் குறித்து வரும் செய்திகளைக் கண்டு, அவரைப் பற்றித் தவறாக நினைத்திருந்தேன். ஆனால், ‘பவர் பாண்டி’யில் நடித்தபிறகு அதெல்லாம் பொய் எனத் தெரிந்து கொண்டேன். கேள்விப்படும் தகவல்களுக்கும், உண்மைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தனுஷ் எனக்குப் பாடம் புகட்டிவிட்டார்” என தெரிவித்துள்ளார் பிரசன்னா.