1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 22 நவம்பர் 2018 (18:14 IST)

பாடலாசிரியராக மாறிய பிரபல நடிகர்

கடந்த 2002ஆம் ஆண்டு ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, பிரபு இணைந்து நடித்த வெற்றிப்படம் 'சார்லி சாப்ளின்'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் 16 ஆண்டுகள் கழித்து தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா, பிரபு மீண்டும் நடிக்க, ஷக்தி சிதம்பரம் இந்த படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில வாரங்களில் நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா பாடலாசிரியர் என்ற புது அவதாரத்தை எடுத்துள்ளார். அவர் எழுதிய ' 'இவளா இவளா ரொம்ப பிடிச்சிருக்கு' என்ற பாடல் நாளை சிங்கிள் பாடலாக வெளியாகவுள்ளது., இந்த பாடலை வெளியிடுவது யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று இரவு 7 மணிக்கு வெளியாகவுள்ளது.

ஏற்கனவே நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் போன்ற அவதாரங்களில் கோலிவுட், டோலிட், பாலிவுட் என ஜொலித்த பிரபுதேவா எழுதிய முதல் பாடலை வரவேற்க அவரது ரசிகர்கள் தயாராக உள்ளனர்.