செவ்வாய், 18 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 10 டிசம்பர் 2020 (13:56 IST)

கோட்டூர்புரம் வீட்டில் சித்ரா உடல்: பொதுமக்கள் அஞ்சலி!

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று அதிகாலை தான் தங்கியிருந்த ஹோட்டலில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக நேற்று காலை கைப்பற்றப்பட்டது 
 
இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து அவரது உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்றுமுன் சித்ராவின் உடல் அவரது கோட்டூர்புரம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது 
 
அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் முல்லையின் ரசிகர்கள் ஏராளமானோர் சித்ராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
சுசித்ராவின் உடலுக்கு நீண்ட வரிசையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருவதால் அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது