வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2015 (11:14 IST)

சொந்த கிராமத்தை தத்தெடுத்த மகேஷ் பாபு

ஸ்ரீமந்துடு படம் வெளியான பிறகு இரண்டு கிராமங்களை தத்தெடுப்பதாக மகேஷ் பாபு அறிவித்திருந்தார்.


 


ஸ்ரீமந்துடு படத்தில், செல்வந்தரான மகேஷ் பாபு பின்தங்கிய நிலையில் இருக்கும் தனது சொந்த கிராமத்தை தத்தெடுப்பதாக நடித்திருந்தார். அதனை தற்போது நிஜத்திலும் நிகழ்த்திக் காட்ட உள்ளார்.
 
முதலில் அவர் அறிவித்தது ஆந்திராவில் ஒரு கிராமத்தை தத்தெடுப்பதாகத்தான். தெலுங்கானாவிலும் ஒரு கிராமத்தை தத்தெடுங்களேன் என்று அங்குள்ள அரசியல்வாதிகள் சொல்ல, அதற்கும் சரி என்றார். இந்த இரண்டு கிராமங்களில் ஒரு கிராமம் எது என்பது முடிவாகியுள்ளது.
 
ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள தனது சொந்த கிராமத்தை தத்தெடுப்பது என மகேஷ் பாபு தீர்மானித்துள்ளார். இது அவரது பூர்வீக கிராமம்.
 
ஸ்ரீமந்துடு படத்தின் நாயகி ஸ்ருதி, தனது தந்தை கமல் மற்றும் நண்பர்களிடம், தமிழகத்தில் ஒரு கிராமத்தை தத்தெடுக்க ஐடியா கேட்டு வருகிறாராம்.