விஷாலின் ஆபரேசன் திருட்டு டிவிடி
விஷாலின் ஆபரேசன் திருட்டு டிவிடி
பல வருடங்களாக திரையுலகம் போராடிக் கொண்டிருந்தாலும் விஷால் களத்தில் குதித்த பிறகே திருட்டு டிவிடி குறித்த விழிப்புணர்வு தமிழ் திரையுலகில் மேலோங்கியது.
திரையில் கெத்து காட்டிக் கொண்டிருந்தவர் தெருவில் இறங்கி நாலைந்து திருட்டு டிவிடி விற்பனையாளர்களை போலீஸில் பிடித்துக் கொடுத்ததோடு நிற்காமல் தனது நண்பர்கள், ரசிகர்களை ஒருங்கிணைத்து நெட்வொர்க் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.
சென்னையில் இருக்கும் விஷாலால் இந்த நெட்வொர்க் காரணமாக மதுரை, சேலத்தில் திருட்டு டிவிடி விற்றவர்களை போலீஸில் சிக்க வைக்க முடிந்திருக்கிறது. அங்கு மட்டும் ஒரு லட்சம் திருட்டு டிவிடிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. திருட்டு டிவிடி தயாரித்து வந்த கணினிகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இதன் மதிப்பு மட்டும் கால் கோடி வருகிறது. மதுரையிலும், சேலத்திலும் திருட்டு டிவிடி தயாரிக்கும் கும்பல் சிக்கியுள்ளது. மேலும், திருட்டு டிவிடிகள் விற்பனை செய்கிறவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருட்டு டிவிடி என்ற கடலின் ஒரு சிறு பகுதிதான் இது. மொத்த திரையுலகமும் கைகோர்த்தால் மட்டுமே திருட்டு டிவிடியை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.