1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2019 (21:06 IST)

‘நித்யானந்தா’ திரைப்படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் நித்யானந்தா நேபாளம் வழியாக வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக ஒரு கருத்தும், அவர் இமயமலையில் தான் ஒதுங்கி இருப்பதாக ஒரு கருத்தும் கூறப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் உள்ளூரில் மட்டும் பிரபலமாக இருந்த நித்தியானந்தா தற்போது உலக பிரபலம் ஆகிவிட்டார். கைலாசம் என்ற ஒரு புது நாட்டை தோற்றுவித்திருக்கும் நிதியானந்தா, தனது நாட்டிற்கு ஐநாவிடம் உரிமை பெற அவர் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுவது சர்வதேச ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளி வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நித்தியானந்தா குறித்து பரபரப்பாக செய்திகள் வெளியானதை அடுத்து நித்தியானந்தா குறித்த திரைப்படம் ஒன்றையும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அருள்நிதி நடித்த ’கே13’ என்ற படத்தை இயக்கிய நீலகண்டன் என்பவர் ‘கைலாசா’ என்ற டைட்டிலில் ஒரு திரைப்படத்தை எடுக்க இருப்பதாகவும் இந்த திரைப்படத்தின் திரைக்கதை தயார் நிலையில் இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறியுள்ளார்