வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 7 ஜூலை 2014 (15:16 IST)

நயன்தாரா, சூர்யா, எமி ஜான்சன், வெங்கட்பிரபு - ஒரு மாஸ் கூட்டணி

சூர்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நயன்தாரா, எமி ஜான்சன் என இரண்டு பேர் நடிக்கிறார்கள். படத்துக்கு மாஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.
பிரியாணி முடிந்ததும் அப்படத்தை இயக்கி ஞானவேல்ராஜாவிடம் அடுத்தப் படத்துக்கு அட்வான்ஸ் வாங்கி அங்கேயே உட்கார்ந்தார் வெங்கட்பிரபு. பிரியாணியை தம்பி கார்த்தியை இயக்கியவர் இதில் அண்ணன் சூர்யாவை இயக்குகிறார். இது காமெடி ஹாரர் சப்ஜெக்ட் என ஒரு வதந்தி உலவி விருகிறது. படத்துக்கு பூச்சாண்டி என்ற பெயரை தேர்வு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது.
 
ஆனால் படத்தின் பெயர் மாஸ் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நயன்தாரா, எமி ஜாக்சன் என்று இரண்டு ஹீரோயின்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய கதை, திரைக்கதை, வசனம் எழுதி வெங்கட்பிரபு இயக்குகிறார் (வசனம் மதன் கார்க்கி என்றது என்னானது?).
 
யுவன் ஷங்கர் ராஜா படத்துக்கு இசையமைக்கிறார். சென்னை, காரைக்குடி பகுதிகளில் பெரும்பாலான காட்சிகளை படமாக்க உள்ளனர்.