1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (16:21 IST)

போயஸ் கார்டனில் இரண்டு வீடுகளை வாங்கிய நயன்தாரா!

நடிகை நயன்தாரா போயஸ் கார்டனில் இரண்டு அபார்ட்மெண்ட்களை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் பிரமுகர்கள் வசிக்கும் பகுதிகளில் போயஸ் கார்டன் பெயர் பெற்றது. அங்கு ரஜினி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வசித்த போது ஸ்டார் அந்தஸ்து பெற்ற பகுதியாக இருந்தது. இந்நிலையில் இப்போது தனுஷ் மற்றும் ஜெயம் ரவி ஆகியோரும் அங்கு வீடு வாங்கி குடியேறி உள்ளனர்.

அதையடுத்து மற்றொரு நட்சத்திர வரவாக நயன்தாரா அங்கு குடியேற உள்ளாராம். அங்கு இரண்டு அபார்ட்மெண்ட்களை அவர் வாங்கியுள்ளதாகவும், விரைவில் நடக்க உள்ள அவரது திருமணத்துக்குப் பிறகு அங்குதான் அவர் குடியேற உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.