1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (15:45 IST)

சினிமா புரியாதவர்களால் தேசிய விருது வழங்கப்படுகிறது - பிரபல இயக்குனர்

Shooting
இந்திய திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்  ஜான் ஆபிரகாம் விருது வழங்கும் விழா கேரளாவில் நடந்தது. இதில், கலந்துகொண்ட பிரபல இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன் தேசிய விருதுகள் வழங்கப்பட்டதற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

தேசிய விருது கமிட்டியில் தற்போது, சினிமா புரியாதவர்கள்தான் உள்ளனர், அவர்களின் விருப்பதற்கு, வேண்டியவர்களுக்கு விருதுகள் வழங்குகிறார்கள். அப்படங்களின் தரம் என்னவென்று தெரியவில்லை.

முன்பெல்லாம் புகழ்பெற்ற இயக்குனர்களும், விமர்சகர்களும் அந்தக் குழுவில் இடம்பெற்றனர். இப்போது அதுமாதிரி இலை என்பதால் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படங்களுக்கு விருதுகள் அளிக்கப்படுகிறது என்று கூறினார்.

மேலும், கேரளாவை சினிமா மட்டுமின்றி அனைத்துத் துறைகளில் இருந்தும் ஒதுக்கிவைக்கப்படுதர்காக  முயற்சிகள் நடந்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.