தமிழில் அறிமுகமாகும் நாகார்ஜுன் மகன்
நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யா தெலுங்கில் முன்னணி இளம் ஹீரோவாக உள்ளார். அவருக்கு தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்று நீண்டநாள் ஆசை.
நாக சைதன்யா வளர்ந்தது சென்னையில். அதனால் தமிழ் சரளமாக பேச வரும். தான் வளர்ந்த தமிழ்நாட்டில் படம் நடித்து பெயர் நாட்ட வேண்டும் என்று நாக சைதன்யா நினைப்பது இயல்பு.
தெலுங்கு இயக்குனர் சந்து சொன்ன கதை நாக சைதன்யாவுக்கு பிடித்துள்ளது. அப்பா, மகன் பின்னணியில் நடக்கும் த்ரில்லர் கதை. எல்லா மொழி பார்வையாளர்களுக்கும் பொதுவான கதை என்பதால் தமிழ், தெலுங்கில் படத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர். இந்த ஐடியாவை கொடுத்ததே நாக சைதன்யாதானாம்.