1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2016 (03:15 IST)

பாகுபலி கதாசிரியர் கைவண்ணத்தில் முதல்வன் 2

இந்தியில் முதல்வன் படம் ஷங்கர் இயக்கத்தில் 'நாயக்' என்ற பெயரில் வெளியானது. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை முதல்வன் 2 என்ற பெயரில் பாகுபலி கதாசிரியர் எழுத்தில் உருவாக இருக்கிறது.


 

 
ஷங்கர் இயக்கத்தில் முதல்வன் படம் 1999ஆம் ஆண்டு அர்ஜூன், ரகுவரன், ஆகியோர் நடிப்பில் வெளியானது. இப்படத்தை பாலிவுட்டிலும் அனில் கபூர் நடிக்க 'நாயக்' என்ற பெயரில் ஷங்கரே இயக்கினார். 
 
இந்நிலையில் தற்போது 'முதல்வன்' படத்தின் 2-ம் பாகத்திற்கான கதையை விஜயேந்திர பிரசாத் எழுதி வருகிறார். ’நான் ஈ’, ’மகதீரா’, ’பாகுபலி’, ’பஜ்ரங்கி பைஜான்’ உள்ளிட்ட பல வரவேற்பு பெற்ற படங்களுக்கு கதை எழுதியவர் விஜயேந்திர பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வன் இரண்டாம் பாகத்தின் கதையை இன்னும் 3 மாதங்களில் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் விஜயேந்திர பிரசாத்.
 
இவர் கதையில் அனைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ள நிலையில் முதல்வன் இரண்டாம் பாகமும் வெற்றி பெறும் என்று கருதப்படுகிறது.