வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2016 (12:15 IST)

மோடி நம்மை ராப்பிச்சைக்காரன் ஆக்கிட்டார் - மன்சூரலிகான் காட்டம்

மோடி நம்மை ராப்பிச்சைக்காரன் ஆக்கிட்டார். புதிய 2000 ரூபாய் நோட்டை பிச்சைக்காரன்கூட வாங்க மாட்டான் என நடிகர் மன்சூரலிகான் காட்டமாக கூறியுள்ளார்.

 
படவிழாவில் கலந்து கொண்ட மன்சூரலிகான், 

"பிரதமர் மோடி நம்மை திடீரென ராப்பிச்சைக்காரன் ஆக்கிவிட்டார். 100 ரூபாய் நோட்டுக்கு பேங்க் கியூவில் நின்று பிச்சை எடுத்துகிட்டிருக்கான். அந்த 2000 ரூபாய் நோட்டை பார்த்தால் சாயம் வெளுத்துப்போன மாதிரி... பிச்சைக்காரன்கூட அதை வாங்க மாட்டான். இந்த புதிய 2000 ரூபாய் நோட்டு சினிமா நோட்டு மாதிரி டுப்ளிக்கேட்டா இருக்கு.

மோடியோ அறிவிப்பால் எல்லா குடும்பமும் பாதிக்கப்பட்டிருக்கு. ஒரு திட்டமும் இல்லாம திடீர்னு அறிவிச்சா எப்படி? ஆயிரம் கோடி, ஐயாயிரம் கோடி வெச்சிருக்கவன் டாலர்ல பணத்தை மாற்றி வைத்திருக்கிறார்கள்... அவன் எவனும் கியூவில் வந்து நிற்கிறானா? இதனால் பாதிக்கப்படுவது ஏற்கனவே செத்துக் கொண்டிருக்கும் விவசாயிகள்தான்" என்று அவர் காட்டமாக குறிப்பிட்டார்.