1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2024 (11:24 IST)

தமிழ்நாட்டில் இதுவரை எந்த மலையாள படமும் செய்யாத சாதனையை நிகழ்த்திய மஞ்சும்மள் பாய்ஸ்!

கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது மஞ்சும்மள் பாய்ஸ்.

படத்தின் முக்கியமான ஒரு இடத்தில் குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் எழுதும் கடிதம் பாடல் இடம்பெற்று ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் தருணமாக அமைந்துள்ளது. இதையடுத்து படக்குழுவை அழைத்து பாராட்டினார் கமல்ஹாசன். படத்துக்கு தமிழகத்தில் திரைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு உலகளவில் வசூலித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் மட்டும் 10 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது. இதுவரை எந்தவொரு மலையாள படமும் படைக்காத சாதனையாக இது அமைந்துள்ளது.