வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 7 ஜூலை 2015 (15:28 IST)

சேரியில் தோழிகளை சம்பாதித்த மனிஷா யாதவ்

இன்றைய இளம் நடிகைகள், கதாபாத்திரம் வலுவாக இருந்தால் எந்த வேடத்தையும் செய்ய தயாராக இருக்கிறார்கள். இது திரைத்துறையின் ஆரோக்கியமான அம்சம். காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக சேரியில் வாழும் பெண்ணாக நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதேபோலொரு வேடத்தை செய்திருக்கிறார் மனிஷா யாதவ்.
ஒரு குப்பை கதை படத்தில் மனிஷா நாயகி. வால்பாறையைச் சேர்ந்த இவர் சென்னை கார்ப்பரேஷனில் வேலை பார்ப்பவரை திருமணம் செய்து சென்னை சேரி ஒன்றில் வாழ வருகிறார். அங்கு நடக்கும் எதிர்பாராத சம்பவம்தான் கதை.
 
இந்தப் படத்துக்காக சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய சேரியில் 40 நாள்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்த காலத்தில் அங்குள்ள சிலரை தோழியாக்கிக் கொண்டதாகவும், அவர்களின் வரவேற்பும், அன்பும் மனம் நெகிழச் செய்ததாகவும் மனிஷா கூறினார்.
 
மிகச்சிறந்த ஸ்கிரிப்ட் என்பதாலேயே, ஒரு குப்பை கதை படத்தில் நடித்ததாகவும் அவர் கூறினார்.