வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : புதன், 6 மே 2015 (12:39 IST)

மணிரத்னம் நலமாக இருக்கிறார் - சுஹாசினி தகவல்

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள டெல்லி சென்ற மணிரத்னம் திடீர் நெஞ்சுவலி காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்குழு தெரிவித்தது.
மணிரத்னத்துக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிரத்னத்துக்கு ஏற்கனவே ஒருமுறை நெஞ்சுவலி வந்துள்ளது. இது இரண்டாவதுமுறை.
 
மணிரத்னம் தற்போது நல்மாக இருப்பதாகவும் நாளை அவர் சென்னை வருவார் எனவும் நடிகையும், மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி தெரிவித்தார்.