வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 4 ஜூலை 2015 (15:30 IST)

ஜெகதி ஸ்ரீகுமாருடன் செல்பி எடுத்துக் கொண்ட மம்முட்டி

மலையாளத்தின் சகலகலாவல்ல நடிகர் ஜெகதி ஸ்ரீகுமாருடன் செல்பி எடுத்துக் கொண்டார் நடிகர் மம்முட்டி.
காமெடி, சென்டிமெண்ட், வில்லன் என்று எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதாகவே மாறி ரசிகர்களை நொடிக்குநொடி பரவசப்படுத்துகிற கலைஞன், ஜெகதி ஸ்ரீகுமார். சில வருடங்களுக்கு முன் நடந்த கார் விபத்து ஜெகதியை ஒரேயடியாக முடக்கிப் போட்டது. கோமா நிலைக்கு தள்ளப்பட்டவர் பிழைப்பாரா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. பலவருட தொடர் சிகிச்சைக்குப் பிறகு இப்போது சக்கர நாற்காலிக்கு மாறியிருக்கிறார்.
 
எப்போதும் சக்கர நாற்காலி. அடுத்தவர் துணையின்றி அசைய முடியாது. உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் நடிப்பை காட்டிய கலைஞன் இப்படி முடங்கிக் கிடப்பது வரலாற்று சோகம். 
 
சில தினங்கள் முன்பு அவரை அவரது வீட்டில் சென்று சந்தித்தார் நடிகர் மம்முட்டி. அவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு தனது ஆத்மார்த்த நண்பருடன் செல்பி எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படத்தை அவர் தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பிறகே, அவர் ஜெகதியை சந்தித்தது தெரிய வந்தது.
 
ஜெகதி வேகமாக உடல்நிலை தேறி வருகிறார் என்று மம்முட்டி குறிப்பிட்டிருந்தது ஜெகதியின் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி.