1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 27 ஜனவரி 2015 (09:06 IST)

அது ருத்ராட்சை தாலி கிடையாது - குஷ்பு விளக்கம்

நகரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த குஷ்பு, ருத்ராட்சை மாலையில் தாலி அணிந்து வந்திருந்தார். இந்தப் படம் பத்திரிகைகளில் வெளியாகி சர்ச்சையானது. துறவிகள் பயன்படுத்தும் புனிதமான ருத்ராட்சை மாலையை குஷ்பு இழிவு செய்துவிட்டார் என ஒருசாரர் குற்றஞ்சாட்டினர். அத்துடன் குஷ்புக்கு எதிராக கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த சர்ச்சையில் குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.
 
நான் அணிந்தது ருத்ராட்ச மாலை அல்ல. பாரம்பரியமிக்க நகையின் ஒரு பகுதிதான் அது. நகரம் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தபோது அந்த நகையை கழுத்தில் அணிந்து இருந்தேன். அது பார்க்க அழகாக இருந்தது. அதை ருத்ராட்ச மாலை என நினைத்து பலரும் என்னிடம் கேட்டார்கள். நான் விளக்கம் சொன்னேன். ஆனால் இப்போது பத்திரிகைகளில் அந்த படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நான் உண்மையான ருத்ராட்ச மாலையை தாலியாக செய்து அணிந்துள்ளதாக செய்தி வெளியிட்டு விட்டார்கள். இதை உண்மை என்று நம்பி ஒருவர் எனக்கு எதிராக வழக்கும் போட்டு விட்டார். ருத்ராட்சம் தெய்வீகமானது என்றும், முனிவர்கள், யோகிகள் அணியக்கூடியது என்றும் படித்து இருக்கிறேன். ருத்ராட்ச மாலை அணிவதால் நல்ல பலன்கள் உண்டாகும் என்றும் கேள்விப்பட்டு உள்ளேன். ஆனால் ருத்ராட்ச மாலைக்கும் நான் கழுத்தில் அணிந்த மாலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. தாலி அணிவது நமது சம்பிரதாயம். நான் என்ன வகையான தாலி அணிந்துள்ளேன் என்று மற்றவர்களிடம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
 
இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.