1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 26 நவம்பர் 2014 (20:22 IST)

பாடல்கள் வெளியீட்டுக்கு திகாரின் பெண் புலி வருகிறார் - பேரரசு பகீர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பன்ச் டயலாக் பேரரசு இயக்கியிருக்கும் படம் திகார். பார்த்திபன், உன்னி முகுந்தன் நடித்துள்ளனர். இரண்டு தாதாக்கள் மோதிக்கொள்ளும் கதை என்பதால் அதிரடியான எட்டு சண்டைக் காட்சிகள் படத்தில் இருக்கிறது.
 
அதாவது, கதைக்கு நடுவில் சண்டைக் காட்சிகள் வருவதைப் போல் திகாரில் சண்டைக் காட்சிகளுக்கு இடையில் கொஞ்சமாக கதை வந்து செல்லும்.
 

 
படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் திகாரின் பெண் புலி கலந்து கொள்கிறார் என்று பேரரசு சொன்ன போது என்னவோ ஏதோ என்று கிலி ஏற்படத்தான் செய்தது. முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண் பேடியைதான் திகாரின் பெண் புலி என்றாராம் பேரரசு. அவர் ஏன் இந்தப் படத்தின் பாடல்களை வெளியிடுகிறார்?
 
திகார் என்று பெயர் வைத்ததால் இருக்கலாம். திகார் ஜெயிலைப் பற்றிய படமாக இருக்கும் என்று கிரண் பேடியும் எண்ணியிருக்கலாம். அவர் படத்தைப் பார்க்கணும் என்று விரும்பினால்...? 
 
பாவம் கிரண் பேடி. விதி வலியது என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.