1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 20 அக்டோபர் 2014 (12:12 IST)

நஷ்டமே வந்தாலும் நாங்க இல்லாமல் கத்தி இல்லை - அடம்பிடிக்கும் லைகா

நாளை மறுநாள் கத்தி வெளியாகிறது. ஒருபக்கம் முன்பதிவு விறுவிறுப்பாக நடக்க, கத்தியை எப்படியும் முடக்குவது என்பதில் சில அமைப்புகள் தீவிரமாக உள்ளன. படத்தை வெளியிடுங்கள், ஆனால் லைகா பெயரில் வெளியிடாதீர்கள் என்று இறங்கி வந்திருக்கிறார்கள் எதிர்ப்பவர்கள்.
கத்தியின் இணை தயாரிப்பாளர் ஐங்கரன் கருணாமூர்த்தி கமிஷனர் அலுவலகத்துக்கு சென்ற போது இதையேதான் அவரிடமும் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் லைகா பெயரில்தான் கத்தியை வெளியிடுவது என்பதில் லைகா சுபாஷ்கரண் உறுதியாக உள்ளார்.
 
ஒருவேளை தமிழகத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு நஷ்டமே ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்திருக்கிறார்கள். 
 
எப்படியும் தீபாவளிக்கு ஒன்றிரண்டு இடங்களிலாவது கத்தி பிரச்சனையை சந்திக்கும் என்றாலும் நஷ்டம் பரவாயில்லை என்கிற தயாரிப்பாளர் இருக்கையில் கத்திக்கோ, அது சம்பந்தப்பட்டவர்களுக்கோ எந்த கஷ்டமும் இருக்கப் போவதில்லை.