1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 2 மார்ச் 2018 (22:36 IST)

கபாலியால் நஷ்டம்; தற்கொலைதான் ஒரே வழி; கதறும் விநியோகஸ்தர்

விநியோகஸ்தர் ஜி.பி. செல்வகுமார் கபாலி படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தினால் தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார்.

 
இது குறித்து ஜி.பி. செல்வகுமார் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ரஜினிக்காந்த் நடித்த கபாலி படத்தின் தென்னாற்காடு, புதுச்சேரி உரிமையை ரூ6 கோடிக்கு வாங்கியிருந்தேன். இதனால் எனக்கு 2.72 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் தாணு கபாலி படத்திற்காக கொடுத்த முன்பணம் 1.50 கோடியை சட்டிலைட் உரிமம் வந்ததும் திரும்பி தருவதாக கூறியிருந்தார். ஆனால் அவர் இன்னும் பணம் தரவில்லை. 
 
இதனால் எனக்கு கடன் கொடுத்தவர்கள் என் வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைத்து விடுவதற்குள் நானே தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளேன். ரஜினியையும், தாணுவையும் கை எடுத்து கெஞ்சி கேட்கிறேன் பணத்தை செட்டில் செய்து கடன்காரர்களிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.