1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 23 மார்ச் 2017 (18:36 IST)

மகளிர் மட்டும் படப்பிடிப்பை முடித்த ஜோதிகா!

ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘மகளிர் மட்டும்’. இப்படத்தை ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா இயக்கி வருகிறார். ஜோதிகாவுடன் ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

 
இப்படத்தில் ஜோதிகா, பிரபா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும், ஆவணப்படம் எடுக்கும் பெண்ணாக ஜோதிகா  நடித்துள்ளார். ஆவணப்படும் எடுக்கும்  போது அவர் சந்திக்கும் பிரச்சனைகள் தான் இப்படம் என்று அவர் கூறியுள்ளார். முழுக்க முழுக்க பெண்களின் பிரச்சினைகளை அலசும் படமாக திரைக்கதை அமைத்திருக்கிறாராம்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து படத்தின் இறுதிக்கட்ட பணிகளை படக்குழுவினர்  தொடங்கவுள்ளனர். ஜிப்ரான் இசை, மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கெனவே ‘மகளிர் மட்டும்’ படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.