வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: புதன், 3 மே 2017 (14:34 IST)

‘பாகுபலி’யால் பதறும் தமிழ் சினிமா

கடந்த வாரம் வெளியான ‘பாகுபலி-2’ படத்தின் காரணமாக, தமிழ் சினிமா உலகம் பதட்டத்தில் இருக்கிறது.

 
 
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியானது ‘பாகுபலி-2’. நான்கே நாட்களில் 400 கோடி ரூபாயை வசூலித்து, இந்திய சினிமா உலகத்தையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. தமிழகத்திலும் 600க்கும் மேற்பட்ட தியேட்டர்களில்  வெளியாகியிருக்கிறது இந்தப் படம். 
 
இதனால், அதற்கு முந்தைய வாரம் படத்தை ரிலீஸ் செய்தால், ஒரு வாரம் மட்டுமே தியேட்டரில் ஓடும் என்பதால், ஒரு  தமிழ்ப் படம் கூட ரிலீஸாகவில்லை. வரும் வாரம் தொண்டன்’, ‘கொளஞ்சி’, ‘எய்தவன்’, ‘ஆரம்பமே அட்டகாசம்’ உள்ளிட்ட சில படங்கள் ரிலீஸாவதாக இருந்தது. 
 
ஆனால், ‘பாகுபலி’க்கு இன்னும் தியேட்டரில் கூட்டம் குறையவில்லை. எனவே, புதிய படங்களை ரிலீஸ் செய்ய  விநியோகஸ்தர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால், தியேட்டர் கிடைக்காமல் புதுப் படங்களின் ரிலீஸ் தள்ளிப்  போயிருக்கிறது.