1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 27 ஜூன் 2017 (10:56 IST)

இயக்குநர் ராஜமெளலி பேசியது எனக்கு வருத்தம்: நடிகை ஸ்ரீதேவி

சூப்பர் ஹிட்டான பாகுபலி படத்தில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி முதலில்  ஸ்ரீதேவியிடம்தான் கேட்டார். அவர் மறுக்கவே அந்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார்.

 
 
இந்நிலையில் இது குறித்து ஸ்ரீதேவி தெலுங்கு தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, பாகுபலி பட சர்ச்சை குறித்து விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். அந்த படத்தில் நடிக்க நான் ரூ. 10 கோடி, ஹோட்டலில் ஒரு ஃபுல் ஃப்ளோர் மற்றும் 10 விமான டிக்கெட்டுக்கள் கேட்டதாக வதந்தி உள்ளது.
 
ஐம்பது ஆண்டுகளாக சினிமா துறையில் உள்ள எனக்கு அடாவடி செய்திருந்தால், இந்நேரம் என்னை பேக் பண்ணி வீட்டிற்கு  அனுப்பியிருப்பார்கள். நான் அத்தனை நிபந்தனைகள் விதித்ததாக தயாரிப்பாளர் ராஜமெளலியிடம் தவறுதலாக கூறினாரா என்று  தெரியவில்லை.
 
இயக்குநர் ராஜமெளலியின் பேட்டியை பார்த்துவிட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரின் ஈகா படத்தை பார்த்துவிட்டு அவரின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். ராஜமெளலி சிறந்த படைப்பாளி. அவர்  என் விஷயம் பற்றி பேசிய விதம் எனக்கு வருத்தம். என் கணவரும் ஒரு தயாரிப்பாளர் என்பதால் அதில் உள்ள கஷ்டம்  என்னவென்று புரியும் என்று நடிகை ஸ்ரீதேவி கூறியிருக்கிறார்.