1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: திங்கள், 8 மே 2017 (12:52 IST)

“பெண்களை நான் ஆபாசமாகக் காட்டவில்லை” – ஆதிக் ரவிச்சந்திரன்

“பெண்களை ஒருபோதும் நான் ஆபாசமாகக் காட்டியதில்லை” என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 
 
முதல் படத்திலேயே இரட்டை அர்த்த வசனங்களால் தெறிக்க விட்டவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் இயக்கிய ‘த்ரிஷா  இல்லேன்னா நயன்தாரா’ படம் இளைஞர்களால் கொண்டாடப்பட்ட அளவுக்கு, பெண்களால் கழுவியும் ஊற்றப்பட்டது. படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், கலெக்‌ஷனில் குறைவைக்கவில்லை.
 
ஆனாலும், எங்கே இவருடைய படத்தில் நடித்தால் தன்னுடைய பெயரும் டேமேஜ் ஆகிவிடுமோ என்று ஒரு நடிகர் கூட  முன்வரவில்லை. ஆனால், ‘பீப் சாங்’ புகழ் சிம்பு மட்டும் தைரியமாக அவர் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இருவரின் காம்பினேஷனில் உருவாகி வருகிறது ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’.
 
அதுகுறித்துப் பேசிய ஆதிக் ரவிச்சந்திரன், “என்னுடைய முதல் படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தது உண்மைதான். ஆனால், நான் ‘பிட்டு’ படம் எடுக்கவில்லை. என்னுடைய படத்தில் பெண்களைத் தவறாகவோ, ஆபாசமாகவோ காட்டவில்லை. எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிகுமார், பி.வாசு போல கமர்ஷியல் படங்கள் எடுக்கவே விரும்புகிறேன்” எனத்  தெரிவித்துள்ளார்.