செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2017 (11:50 IST)

அன்பு செழியன் ஒரு பணப் பிசாசு - கௌதம்மேனன் கொந்தளிப்பு

சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.


 
பல்வேறு சினிமா பிரபலங்கள் சினிமா ஃபைனான்சியர் அன்பு செழியனுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அன்புவின் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
 
இந்நிலையில், இயக்குனர் கௌதம் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் “அசோக் உன்னுடைய மரணம் ஈவிரக்கம் அற்ற ஒரு பணப்பிசாசை அடக்கப் பயன்படக்கூடும் என்பதை அறிவேன்... ஆனால்... நீ உயிரோடிருந்து இந்தப் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும் என்பதையே நாங்கள்  விரும்பியிருப்போம்...” எனக் குறிப்பிட்டுள்ளார்.