1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 31 அக்டோபர் 2014 (11:17 IST)

கொம்பன் படப்பிடிப்பில் காட்டாற்றில் சிக்கிய கார்த்தி

குட்டிப்புலி முத்தையாவின் இயக்கத்தில் கார்த்தி கொம்பன் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் மீன் வெட்டி அருவியில் சில நாள்களாக நடந்து வந்தது.
காட்டாற்றினால் உருவான இந்த அருவியில் இரவு நேரத்தில் சண்டைக் காட்சியை படமாக்கினர். அப்போது மலைப்பிரதேசத்தில் பெய்த மழையால் அருவியில் வெள்ளம் அதிகரிக்க ஆரம்பித்தது. இரவு நேரம் என்பதால் வெள்ளம் அதிகரித்ததை யாரும் கவனிக்கவில்லை.
 
திடீரென வெள்ளம் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை இழுக்க ஆரம்பிக்கவே அனைவரும் கூச்சல் போட ஆரம்பித்தனர். உடனடியாக அங்கு வந்த வனத்துறையினர் வெள்ளித்தில் சிக்கியவர்களை பாதுகாப்புடன் மீட்டனர்.