வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 27 ஜூன் 2017 (11:05 IST)

பிக் பாஸ் நிகழ்ச்சி: ஆர்த்தி- ஜூலியானா குடுமிபிடி சண்டை!!

உலக அளவில் பிரபலமான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், 15 பிரபலங்கள் 100 நாட்களுக்கு ஒரே வீட்டில் வசிப்பர். வெளியுலக தொடர்பு எதுவும் இருக்காது. 100 நாட்களுக்கு யார் இப்படியே வாழ்கிறார்களோ, அவர்கள் தான் வெற்றியாளர்கள்.


 
 
வெற்றிகரமாக துவங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் முடிவிலேயே நகைசுவை நடிகை ஆர்த்தி மற்றும் ஜல்லிகட்டு போராட்டத்தில் பங்குபெற்ற ஜூலியானவிற்கு சண்டை ஏற்பட்டுள்ளது.
 
பிக் பாஸ் வீட்டில் முதல் நாள் யார் யார் எங்கு தூங்குவது என பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த டபுள் பெட்டில் தூங்குவது யார் என ஆர்த்தி மற்றும் ஜூலியானாவிற்கும் இடையே பிரச்சனை வந்தது.
 
எனக்கு டபுள் பெட் வேண்டுமென ஜூலியானாவும், என் சைஸ்கு சிங்கிள் பெட்டில் படுக்க முடியாது, எனக்கு டபுள் பெட் வேணும் என ஆர்த்தி மல்லுக்கு நிற்க சிறிது நேரம் சண்டை முற்றியது.
 
பின்னர் ஜூலியானா மற்றும் ஆர்த்தி இருவரும் பெட்டை ஷேர் செய்துகொள்ள ஒப்புக்கொண்டனர்.