இப்படி நடிப்பதையே ரசிகர்கள் விரும்புகிறார்கள்: தமன்னா பேட்டி!
நடிகை தமன்னா ஹைதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, நடிகைகள் ரசிகர்களை கவர்வதற்காக நீச்சல் உடை அணிந்து, உடம்பை காட்டி கவர்ச்சியாக வந்தால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று கூறுவதை நான் நம்ப மாட்டேன். குடும்ப பாங்காக வரும் நடிகைகளையே அவர்கள் விரும்புகிறார்கள்.
நான் சினிமாவில் அறிமுகமானபோதே பெற்றோரிடம் கவர்ச்சி உடைகளை அணிய மாட்டேன் என்று உறுதிமொழி அளித்து விட்டேன். எனவே ரசிகர்களை கவர எந்த சூழ்நிலையிலும் நீச்சல் உடை அணியமாட்டேன். உடைகள் நடிகைகளை பிரபலபடுத்தாது. திறமைகள்தான் அவர்களை உயர்த்தி விடும். டைரக்டர்கள் என்னிடம் கதை சொல்லும்போது கதாபாத்திரத்துக்கு எந்த மாதிரி உடை அணிய வேண்டும் என்பதை தீர்மானித்து விடுவேன்.
‘பையா’ படத்தில் நடித்தபோது இரண்டு மூன்று ஆடைகளுக்கு மேல் நான் அணியவில்லை. அதை பலரும் பாராட்டினார்கள். தற்போது தமிழில் மூன்று படங்களிலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறேன். தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் வருகிறது. கதை மர்றும் உடைகள் விஷயத்தில் மட்டும் கண்டிப்பாக இருக்கிறேன்.
எல்லோரும் தொழில்களிலும் பலன் கிடைக்காவிட்டால் அதை கசப்பான அனுபவமாக உணர்வார்கள். ஆனால் சினிமாவில் அப்படி இல்லை. இங்கு பலனை எதிர்பார்க்காமல் தொழிலை மட்டும் நேசிக்க வேண்டும். படங்கள் தோல்வி ஏற்பட்டாலும் சிறப்பாக நடித்திருந்தால் பாராட்டுகள் கிடைக்கும். எனது ஒவ்வொரு படமும் சிறந்த படங்கள்தான் என்று கூறியுள்ளார்.