வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 1 ஏப்ரல் 2019 (09:41 IST)

பல மடங்கு சம்பளத்தை உயர்த்திய பிரபல நடிகர்: இயக்குனர்கள் அதிர்ச்சி!!!

நடிகர் மகேஷ் பாபு தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியிருப்பது தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழில் தளபதி விஜய் என்றால், அப்படி தெலுங்கில்  நடிகர் மகேஷ் பாபுவை பார்க்கிறார்கள். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான பரத் அனே நேனு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
 
இந்த படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் 'மகர்சி' படத்தில் மகேஷ் பாபு, நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் மே 9ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் மகேஷ் பாபு தனது அடுத்த படத்திற்கு கிடுகிடுவென பல மடங்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம். இதனால் பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஷாக் ஆகியுள்ளனராம்.