ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (05:03 IST)

பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பிக்பாஸ் என்னும் குரல் தான். இன்னும் இந்த குரலுக்குரியவர் யார் என்பதை கமல்ஹாசனே அறிந்திருக்க மாட்டார். தற்போது குரல் மட்டுமே கொடுத்து வரும் பிக்பாஸ் 100வது நாளில் வெற்றி பெறுபவருக்கு பரிசு கொடுக்க வருவார் என்று கூறப்படுகிறது.



 
 
இந்த நிலையில் பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்கரர் டப்பிங் கலைஞர் கோகுல்நாத் என்ற கோபி என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. முதலில் இந்த செய்தியை யார் ஆரம்பித்தார்களோ தெரியவில்லை தற்போது இந்த செய்தி வெகு வேகமாக வைரலாகி வருகிறது.
 
டப்பிங் கலைஞர் கோகுல்நாத் என்ற கோபி என்பவர் அம்புலி போன்ற ஒருசில படங்களில் நடித்தது மட்டுமின்றி பல தொலைக்காட்சிகளில் டான்ஸ் நிகழ்ச்சி உள்பட ஒருசில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். ஆனால் இவர் ஒரு பேட்டியில் பிக் பாஸ் குரல் என்னுடையது இல்லை என மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.