1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வியாழன், 10 மே 2018 (17:02 IST)

‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் போட்டோக்களை ஏன் பிளாக் அண்ட் வொய்ட்டில் வெளியிடுகிறார்கள் தெரியுமா?

‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் போட்டோக்களை ஏன் பிளாக் அண்ட் வொய்ட்டில் வெளியிடுகிறார்கள் என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது. 
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. அரவிந்த் சாமி, ஜோதிகா, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, அதிதி ராவ்,  ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இந்தப்  படத்தைத் தயாரிக்கின்றன.
இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஒருசில போட்டோக்கள் வெளியாகியுள்ளன. அவை  எல்லாமே பிளாக் அண்ட் வொய்ட்டில் உள்ளன. ஏன் அப்படி வெளியிட்டுள்ளார்கள் என்றால், கலர் போட்டோக்களாக வெளியிட்டால் ஒளிப்பதிவாளர்  பயன்படுத்தியுள்ள படத்தின் கலரை எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால், இப்படி பிளாக் அண்ட் வொய்ட்டில் வெளியிட்டிருக்கிறார்கள்.