வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2015 (15:05 IST)

மணிரத்னத்தின் முதல் சாய்ஸ் யார் தெரியுமா?

மணிரத்னம் இயக்கியிருக்கும் ஓ காதல் கண்மணி வரும் ஏப்ரல் 10 திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், கனிகா, பிரகாஷ்ராஜ் நடித்துள்ளனர்.
 
ஓ காதல் கண்மணியின் ஸ்கிரிப்டை எழுதி முடித்ததும் மணிரத்னத்தின் முதல் சாய்ஸாக இருந்தவர் நடிகர் பகத் பாசில். சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக, ராம் சரண் தேஜாவை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டது.
 
ஆக்ஷன் படங்களில் நடித்து வரும் ராம் சரணுக்கு மணிரத்னத்தின் அலைபாயுதே டைப் மென்காதல் சரிவராது எனத்தோன்ற, இறுதியாக துல்கர் சல்மான் ஒப்பந்தமானார்.
 
ஓ காதல் கண்மணி தமிழ், மலையாளம் இரு மொழிகளில் வெளியாக உள்ளது.