150 வது படம் சக்சஸ்... மீண்டும் படம் நடிக்கும் சூப்பர் ஸ்டார்
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் 150 வது படம், கைதி நெம்பர் 150 மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் படம் நடிப்பது என்று முடிவு செய்துள்ளார் சிரஞ்சீவி.
அவரது அடுத்தப் படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குவார் என கூறப்படுகிறது. மார்ச்சில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் சிரஞ்சீவியுடன் அவரது மகன் ராம் சரணும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் கதை இன்னும் முடிவாகவில்லை என்பது தான் இதில் விசேஷம்.