வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 30 ஏப்ரல் 2018 (11:20 IST)

வாழ்க்கைக்கு பாதுகாப்பு திருமணம் இல்லை, பணம் தான்: சிம்புவின் முதல் நாயகி

சிம்பு நாயகனாக அறிமுகமான 'காதல் அழிவதில்லை' படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை சார்மி. இந்த படத்திற்கு பின்னர் 'ஆஹா எத்தனை அழகு', லாடம் உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்தார்.
 
தற்போது இவருக்கு வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் பிரபல இயக்குனர் பூரி ஜெகந்நாத் அவர்களுடன் இணைந்து திரைப்படம் ஒன்றை தயாரித்து வருகிறார். பூரி ஜெகந்நாத்துடன் இணைந்து படம் தயாரிப்பதால் இருவருக்கும் இடையே காதல் என்றும் விரைவில் திருமணம் என்றும் டோலிவுட்டில் கிசுகிசுக்கள் பரவி வருகிறது.
 
இந்த நிலையில் இந்த கிசுகிசு குறித்து விளக்கம் அளித்துள்ள சார்மி, 'நானும் இயக்குனர் பூரியும் தொழில் முறையில் பார்ட்னர்கள். மற்றபடி எங்களுக்குள் எந்த உறவும் இல்லை. ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து தொழில் செய்வது தவறா?
 
மேலும் எனக்கு காதல், திருமணம் இவற்றில் நம்பிக்கை இல்லை. ஒரு பெண்ணும் திருமணம் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது பணம் தான் பாதுகாப்பு. என்னிடம் எனது வாழ்க்கைக்கு தேவையான பணம் உள்ளது. அதுபோதும் எனக்கு. நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்' என்று கூறியுள்ளார்.