1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 29 ஏப்ரல் 2017 (10:41 IST)

விஜய் மூலம் தமிழக்கு வரும் சாய் பல்லவி!

பிரேமம் படம் மூலம் மலர் டீச்சராக இளைஞர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் நடிகை சாய் பல்லவி. நடிகை  சாய் பல்லவி முதன் முதலில் தமிழில் ஏ.எல். விஜய் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

 
 
இயக்குநர் ஏ.எல்.விஜய் மலையாளத்தில் வெளியான சார்லி படத்தைத் தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளார். சாய்பல்லவி அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்கள். ஆனால், திடீரென அந்தப் படம் பிரேக் டவுன் ஆக, நடிகையை மட்டும் வைத்து  அடுத்த படத்தை ஆரம்பிக்க இருக்கிறார்.
 
மலையாளத்தில் வெளியான சார்லி தமிழ் ரீமேக் படத்தில் சாய் பல்லவி நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்த படத்தை இயக்கவிருந்த ஏ.எல். விஜய், வனமகன் படத்தை அடுத்து கரு என்ற படத்தை இயக்குகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும்  இந்த படத்தில் சாய் பல்லவிதான் நாயகியாக நடிக்கிறாராம். மேலும் கரு படத்திற்கு பிறகு ஏ.எல் விஜய் இயக்கும் அடுத்த  படத்திலும் சாய்பல்லவிதான் நாயகியாக நடிக்கிறாராம்.